24 66077584a4281
இலங்கைசெய்திகள்

ஹம்பாந்தோட்டையில் ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர்!

Share

ஹம்பாந்தோட்டையில் ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மகா சம்மேளனம் இடம்பெறவுள்ளது.

‘போராட்டத்தை ஆரம்பிப்போம் – ஹம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளில் தங்காலை நகரில் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன்போது கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சம்மேளனத்தில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளன கூட்டத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

மேலும் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுஜன பெரமுனவின் முதலாவது மாவட்ட மகா சம்மேளனம் தங்காலை நகரில் இடம்பெறவுள்ளது.

மே தின கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...