11 13
இலங்கைசெய்திகள்

தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்த இறுதி முடிவை மீண்டும் எடுக்க கூட்டம்

Share

தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்த இறுதி முடிவை மீண்டும் எடுக்க கூட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை ஒன்று கூடவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அண்மையில் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானிகளும் நேற்று முன்தினம் இரத்து செய்யப்பட்டன.

சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானிகளுக்கு எதிராகப் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், மேற்படி வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அடுத்த மாதத்துக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மேற்படி சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பாக பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக 1,700 ரூபா சம்பளத்துக்குப் பதிலாக அதனிலும் குறைந்த தொகை ஒன்றுக்கு இணக்கம் எட்டப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சம்பளத்தொகை தொடர்பாக புதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சம்பள நிர்ணய சபையை ஒகஸ்ட் மாதம் கூட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...