இலங்கைசெய்திகள்

உலக வங்கியின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கைப் பெண்கள்

5 4 scaled
Share

உலக வங்கியின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கைப் பெண்கள்

உலகிலே தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர்.

11 பேர் அடங்கிய குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும்.

தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளை வகிப்பதில் சிறந்த ஆளுமைகளை கிளியர் ஹேர் பாத் (#ClearHerPath) என்ற ஹாஷ் டாக்குடன் உலக வங்கி வெளியிட்டுள்ளது.

விழுது என்ற சிவில் சமூக அமைப்பிற்கு தலைமை தாங்கும் மைத்ரேயி ராஜசிங்கம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி வில்சன் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தெற்காசியாவில், நான்கு பெண்களில் ஒருவர் மாத்திரமே பணிபுரிவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல மில்லியன் பெண்கள் வீட்டிற்கு வெளியே தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டு தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வருமானம் ஈட்டி, தங்கள் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்குப் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை என்பதே இதன் அர்த்தமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள், கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகல் இல்லாமை மற்றும் ஊதியம் இல்லாத வேலை மற்றும் குடும்ப பராமரிப்புப் பொறுப்புகளின் நேரத்தைச் செலவழிக்கும் சுமை உள்ளிட்ட பல தடைகளை தெற்காசியப் பெண்கள் தொழிலில் ஈடுபடுவதில் எதிர்நோக்குகின்றனர்.

எனினும், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கான பாதையைத் உருவாக்குவதற்கு, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பங்களிக்க முடியுமென உலக வங்கி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...