tamilni 183 scaled
இலங்கைசெய்திகள்

மூடநம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து

Share

நாட்டில் நிலவி வரும் மூட நம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூட நம்பிக்கைகளின் காரணமாக 7500 குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தினால் நாட்டில் 22 மில்லியன் சனத்தொகைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத்தேவையில்லை என சமூகத்தில் மூட நம்பிக்கை நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தட்டம்மை மீண்டும் தலைதூக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தட்டம்மை நோய்த்தொற்று தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுமார் 7500 குழந்தைகள் இருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களது பிள்ளைகள் தட்டம்மை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வயதுடையவர்கள் என்றால் உடனடியாக மாகாண தடுப்பூசி ஏற்றும் நிலைகளுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...