tamilni 277 scaled
இலங்கைசெய்திகள்

மீரிபெத்த பகுதியில் மண் சரிவு அபாயம்

Share

மீரிபெத்த பகுதியில் மண் சரிவு அபாயம்

பதுளை கொஸ்லந்த மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ..ஜே. பிரியங்கணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் தோட்ட குடியிருப்புகளில் வசித்து வந்த 27 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளிலும் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் மண் சரிவு காரணமாக பதுளை கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...