அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை
இலங்கைசெய்திகள்

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை! வெளியேறிய கடைசி நிபுணர்

Share

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை!

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கு குறைந்தது 4,000 நிபுணத்துவ மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனினும் தற்போது, 2000 மருத்துவர்களே சேவையில் உள்ளனர்.

அத்துடன் சிறப்பு மருத்துவர்களின் ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முடிவால், மீதமுள்ள 50 சதவீதத்தில் சுமார் 250 மருத்துவர்கள் தமது பதவியை இழப்பார்கள் என்றும் அசோக குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 289 மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 155 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களில் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மீதமுள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால், சுகாதாரத் துறை மேலும் 20 மயக்க மருந்து நிபுணர்களை இழக்கும் என்று குணரத்ன கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் குழந்தை கதிரியக்க மருத்துவத்தில் ஒரே ஒரு நிபுணர் மட்டுமே இருந்தார், அவரும் தற்போது புலம்பெயர்ந்துள்ளார் என்று விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...