6 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள பலர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள பலர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தட்டம்மை தடுப்பூசியை செலுத்தும் விசேட திட்டத்தினை நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைமுறைபடுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவகத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடு என்றபோதிலும், 2023 ஆம் ஆண்டிற்கு பின்னர் சில பகுதிகளில் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே 9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், தடுப்பூசி செலுத்தாத பலர் ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களும் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...