12 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய திட்டங்கள்

Share

நாட்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய திட்டங்கள்

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ”இவற்றில் 58 செயற்றிட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 02 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 03 வெளிநாட்டு கடன் திட்டங்கள் மற்றும் 08 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின் படி, அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

இந்நிலையில், கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.

அவற்றுள் வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த செயற்றிட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டார்.

இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படவேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு பாதியில் நிறுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை நல்ல சான்றாகும்.

நாடு மறுவளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது என்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகள் என்ன அவதூறுகளை கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நாடு மீண்டு வருகிறது” என விளக்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...