tamilni 290 scaled
இலங்கைசெய்திகள்

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்

Share

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்

குருணாகல் – பன்னல, சந்தலங்காவ பிரதேசத்தில் பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட கொள்வனவு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட போலி நிறுவனத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் மோசடி செய்தமை தெரியவந்தது.

இந்நிலையில், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சந்தேக நபர் பிஎம்டபில்யு(BMW) ரக கார்கள், அவ்டி ரக கார் மற்றும் பெஜ்ஜோ ரக ஜீப் ஒன்றை வாங்கியயுள்ளதாக கூறியுள்ளார்.

வைகல பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 110 இலட்சம் ரூபாவிற்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்த அவர், பன்னல நகரில் 9 பேர்ச்சஸ் காணியை 130 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ததுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளதுடன் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பு பிரிவினரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....