tamilni 290 scaled
இலங்கைசெய்திகள்

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்

Share

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்

குருணாகல் – பன்னல, சந்தலங்காவ பிரதேசத்தில் பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட கொள்வனவு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட போலி நிறுவனத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் மோசடி செய்தமை தெரியவந்தது.

இந்நிலையில், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சந்தேக நபர் பிஎம்டபில்யு(BMW) ரக கார்கள், அவ்டி ரக கார் மற்றும் பெஜ்ஜோ ரக ஜீப் ஒன்றை வாங்கியயுள்ளதாக கூறியுள்ளார்.

வைகல பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 110 இலட்சம் ரூபாவிற்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்த அவர், பன்னல நகரில் 9 பேர்ச்சஸ் காணியை 130 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ததுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளதுடன் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பு பிரிவினரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...