24 663307c0b642f
இலங்கைசெய்திகள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் அதிகரிப்பு

Share

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வரை மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர அடிப்படையில் மத்திய வங்கி அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்தமையே நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்புக்கு முக்கியமாக காரணமாகும்.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில்துறைப் பொருட்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு முக்கியமாக ஏற்றுமதி வருவாய் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளதுடன் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் மார்ச் மாதத்தில் 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...