இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்

Share

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (18.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வருடங்களில் இலங்கை பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும். இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

காலநிலை மாற்றமே குடிநீர் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டன.

அதன்படி நாட்டில் வழமையாக வருடாந்தம் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும். மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழை பெய்யும்.

தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மே மாதத்தில் மாத்திரம் 2500 மில்லிலீற்றர் மழைபெய்யலாம். இதனை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்கமுடியாதது குறிப்பாக உயர் வலயங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...