tamilnaadih 2 scaled
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Share

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டமானது வுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது ஆரம்பமாகியுள்ளது.

தற்போது இந்த ஆர்பாட்ட பேரணியானது வுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து தொல்பொருள் திணைக்களம் வரை நகரவுள்ளது.

இதன்படி ஆர்பாட்டக்களத்தில் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்பாட்டமானது வவுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய வாகன பேரணியொன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....