25 693bb9d901043
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்: அமைச்சர் லால் காந்த தகவல்!

Share

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

கொத்மலை அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக அணைக்கட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. “மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை” என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபடலாம் எனவும் கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

“கொத்மலை அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாகப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்” என்று அமைச்சர் மக்களுக்கு உறுதியளித்தார்.

சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...