24 65fe47ece69fe
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி

Share

அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி

அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாக அதிகாரிகள் தொடர்ந்தும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

நாட்டின் பல அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், கணக்காய்வுச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு எதிரான அரச நிர்வாக அதிகாரிகளினால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவிகளில் நீடித்துள்ளமையினால் சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...