10 23
இலங்கைசெய்திகள்

தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்.. மார்க் கார்னி உறுதி!

Share

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற போரின் ஆயுத மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை – துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.

கனடாவின் தமிழ் சமூகத்தையும் நாங்கள் நினைவு கூருகிறோம், அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் நினைவையும், கனடா முழுவதும் திட்டமிடப்பட்ட பல நினைவுச் சேவைகளையும் கொண்டு செல்கிறார்கள்.

எனவே, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது.

இந்த புனிதமான ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும் வேளையில், அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தைரியத்துடனும், நீடித்த அமைதிக்காகவும் செயல்படுவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...