10 23
இலங்கைசெய்திகள்

தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்.. மார்க் கார்னி உறுதி!

Share

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற போரின் ஆயுத மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை – துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.

கனடாவின் தமிழ் சமூகத்தையும் நாங்கள் நினைவு கூருகிறோம், அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் நினைவையும், கனடா முழுவதும் திட்டமிடப்பட்ட பல நினைவுச் சேவைகளையும் கொண்டு செல்கிறார்கள்.

எனவே, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது.

இந்த புனிதமான ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும் வேளையில், அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தைரியத்துடனும், நீடித்த அமைதிக்காகவும் செயல்படுவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...