25 684578d12b30a Recovered Recovered
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் – மோசடியான முறையில் விடுதலையான பலர்

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் ஆபத்தான கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில சிறைச்சாலைகளின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மன்னிப்பை பயன்படுத்தி அனுராதபுரத்தை சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...