5 45
இலங்கைசெய்திகள்

புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! அரசியலில் இருந்து பலர் ஓய்வு

Share

புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! அரசியலில் இருந்து பலர் ஓய்வு

தேர்தலில் வெற்றிபெற்றாலும் சலுகைகள் எதுவும் கிடைக்காது என்பதனாலேயே பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ளதுடன் அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வெற்றி என்பது உண்மையில் மக்கள் பெற்ற வெற்றியாகும். அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் விளைவாக, எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவும் தெளிவாகியுள்ளது.

இந்த அரசியல்வாதிகள், தாங்கள் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டதை முன்கூட்டியே உணர்ந்து தேர்தலில் போட்டியிடுவதில்லையென முடிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது வீணானது என்று நினைக்கின்றனர்.

வாகன அனுமதிப்பத்திரம், பாதுகாப்புப் பணியாளர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் போன்றவற்றைப் பெறமாட்டார்கள் என்பதும், ஊழலில் ஈடுபடும் நிலையில் இருக்க மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. எதிர்க்கட்சியில் இருந்தாலும், தங்களால் பழைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதனால்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
download
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை! – 50 கிலோ ‘ஹஷிஷ்’ பறிமுதல்; இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 50...

1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும்...

ms dhoni 2012 1200 1726388754
விளையாட்டுசெய்திகள்

தோனியின் பதவி விலகல் சொந்த முடிவு அல்ல? – பிசிசிஐ கொடுத்த அழுத்தம் குறித்து அம்பலமான உண்மை!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும்...

1739372035 images 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் வரம்: e-BMD திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 8,027 பேர் பயன்!

இலங்கை அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட...