2 26
இலங்கைசெய்திகள்

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

Share

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வேறொரு இடத்திலிருந்து நடத்தியதாகக் கூறினார்.

சகோதரனின் நிதிமோசடியை அம்பலப்படுத்தியவன் நானே

தனது சகோதரரின் நிதி மோசடியை முதலில் அம்பலப்படுத்தியவர் தான் என்றும், அது குறித்து தான் முறைப்பாடு அளித்ததிலிருந்து சகோதரனுடனான நட்பை துறந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாம் ஒரே வயிற்றில் இருந்து பிறந்தாலும், தனிநபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...