2 26
இலங்கைசெய்திகள்

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

Share

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வேறொரு இடத்திலிருந்து நடத்தியதாகக் கூறினார்.

சகோதரனின் நிதிமோசடியை அம்பலப்படுத்தியவன் நானே

தனது சகோதரரின் நிதி மோசடியை முதலில் அம்பலப்படுத்தியவர் தான் என்றும், அது குறித்து தான் முறைப்பாடு அளித்ததிலிருந்து சகோதரனுடனான நட்பை துறந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாம் ஒரே வயிற்றில் இருந்து பிறந்தாலும், தனிநபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...