2 26
இலங்கைசெய்திகள்

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

Share

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வேறொரு இடத்திலிருந்து நடத்தியதாகக் கூறினார்.

சகோதரனின் நிதிமோசடியை அம்பலப்படுத்தியவன் நானே

தனது சகோதரரின் நிதி மோசடியை முதலில் அம்பலப்படுத்தியவர் தான் என்றும், அது குறித்து தான் முறைப்பாடு அளித்ததிலிருந்து சகோதரனுடனான நட்பை துறந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாம் ஒரே வயிற்றில் இருந்து பிறந்தாலும், தனிநபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...