16 10
இலங்கைசெய்திகள்

தேசிய கராத்தே போட்டியில் சாதித்த மன்னார் கராத்தே மாணவர்கள்

Share

தேசிய கராத்தே போட்டியில் சாதித்த மன்னார் கராத்தே மாணவர்கள்

மன்னார் (mannar)விடத்தல்தீவை சேர்ந்த அ. அமல்ராஜ் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மன்னார் மடு கல்வி வலய அடம்பன் மத்திய மகாவித்தியாலய 13 வயது மாணவி செல்வி மகேந்திரன் சேருயா கடந்த 04/12/2024 அன்று கொழும்பு (colombo)சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற (குமித்தே) கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

18 வயது கீழ் பிரிவில் தேசிய கராத்தே போட்டியில் இதுவே மன்னார் மாவட்ட வரலாற்றில் முதல் தடவை என்பதும் மாணவியும் ஆசிரியரும் மாவட்ட ரீதியில் பாராட்டு பெற்று வருகின்றனர்

அத்துடன் கடந்த 08/12/2024 அன்று கிளிநொச்சி(kilinochchi) உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மன்னார் மாவட்ட கராத்தே போட்டியில் 18 மாணவர்கள் போட்டியிட்டனர் இதில் 32 தங்கப்பதக்கம் 09 வெள்ளிப்பதக்கம் 03 வெண்கலப்பதக்கம் என 44 பதக்கங்களை பெற்றிருந்தனர்.

இதில் விடத்தல் தீவு, அடம்பன், நானாட்டான், வங்காலை, மன்னார், கற்கிடந்தகுளம் , முருங்கன் ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு 05 மாணவர்கள் இதில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

. அமல்ராஜ் இவோன் மன்/தூய ஜோசவாஸ் மகாவித்தியாலயம்

. p.றஜீபன் சென் ஆன்ஸ் வங்காலை

. N.நிதுனா சென் ஜோசப் விளையாட்டுகழகம் கற்கிடந்தகுளம்

J.ஜெசின் சென் ஜோசப் விளையாட்டு கழகம் . கற்கிடந்தகுளம்

S.முகேஸ் மன்/ சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அமல்ராஜ் இவோன் ஸ்ரேயா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மாவட்ட ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இதில் போட்டியிட்ட 18 வீரர்களும் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். என்பதோடு அமல்ராஜ் றொமாரியோ பில் பிராங்கி குமித்தே(gold 01) குரும் காட்டா(gold) தனிக்காட்டா சில்வர் ஆகியன பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...