25 694147cfc9dd2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்டைதீவு புதைகுழி விவகாரம்: பொலிஸ் அறிக்கையை தட்டச்சு வடிவில் சமர்ப்பிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Share

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில், பொலிஸார் சமர்ப்பித்த கையால் எழுதப்பட்ட அறிக்கையைத் தட்டச்சு (Typed) வடிவில் இன்று (17) சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டைதீவில் உடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து விசாரணை செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி பாதிக்கப்பட்ட தாயார் ஒருவராலும், தீவக முன்னேற்றக் கழகத் தலைவராலும் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வசதிகள் இல்லை எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது பல வருடங்களுக்கு முந்தைய விடயம் என்பதால், விரிவான விசாரணைக்காகப் பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர்.

அதன்படி, நேற்று (16) செவ்வாய்க்கிழமை, நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் இராணுவத்தினரிடம் பெறப்பட்ட சாட்சிகள் அடங்கிய அறிக்கையை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினர் சமர்ப்பித்தனர்.

பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கை கையால் எழுதப்பட்டதாக இருந்ததால், அதன் முக்கியத்துவத்தைக் கருதி அதனைத் தட்டச்சு செய்து தெளிவான பிரதியாக இன்று (17.12.2025) மீண்டும் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியைப் பெற்றுத்தரும் நோக்கில் இக்கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்த அறிக்கையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...