7 45
இலங்கைசெய்திகள்

வாளுடன் ஜனாதிபதி அநுரவை சந்திக்க முற்பட்ட நபர்: பின்னர் நடந்த சம்பவம்

Share

வாளுடன் ஜனாதிபதி அநுரவை சந்திக்க முற்பட்ட நபர்: பின்னர் நடந்த சம்பவம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்க விரும்புவதாக கூறி வாள் ஒன்றுடன் கலவரமாக நடந்துகொண்ட நபர் ஒருவர் பிலியந்தலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை தும்போவில பிரதேசத்தைச் சேர்ந்த (53) வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று முற்பகல் (26) வாளுடன் ஜாலியகொட சந்தியில் வந்து அங்கிருந்தவர்களிடம் கடுமையான வார்த்தைகளால் முரண்பட்டுள்ளார்.

இதனிடையே, அருகில் இருந்தவர்களிடம் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரவை சந்திக்க விரும்புவதாகவும் இல்லை என்றால் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்து கொள்வதாகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியில் ஏறி கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக பிலியந்தலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, அந்த நபரை 1990 சுவாசரி காவுவண்டி மூலம் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த நபரின் கையில் இருந்த வாளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...