tamilni 252 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தொழிலதிபருக்கு அதிர்ச்சி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தொழிலதிபருக்கு அதிர்ச்சி

ஓமன் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சீனப் பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

47 வயதான லெபனான் நாட்டு வர்த்தகர் ஒருவர் ஓமன் எயார்லைன்ஸின் WY-371 விமானத்தில் தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 07.20 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

இந்த விமானத்தின் வணிக வகுப்பு இருக்கைகளில் இந்த தொழிலதிபரும் அவரது தாயும் வந்திருந்தனர், அவர்களுடன் சீன நாட்டவர் உட்பட மேலும் மூவரும் வந்துள்ளனர்.

லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பை விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள பொதிகள் வைக்கும் பெட்டியில் வைக்கப்பட்டது. விமானம் இரவில் பயணித்ததால், விமானத்தின் உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டு, பயணிகளுக்கு ஆரோக்கியமான தூக்கத்திற்கு தேவையான பின்னணி தயார் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமானத்தின் வணிக வகுப்பில் இருந்த சீனர், லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பையை திறந்து பணப்பையில் இருந்த 14,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளார். அதற்கு பதிலாக 18 எகிப்து நாட்டு நாணயத்தாளை பணப்பை வைத்து சென்றுள்ளார்.
இதுபற்றி எதுவும் தெரியாத லெபனான் நாட்டு தொழிலதிபர், விமானத்தில் இருந்து இறங்கி கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள வங்கிகளுக்கு சென்று தனது அமெரிக்க பணத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்ற முயற்சித்த போதே இதனை கண்டுபிடித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, தற்போது காணாமல் போன சீன பிரஜையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...