rtjy 247 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Share

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று(24.09.2023) காலை தோட்டக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய ஆறுமுகம் துரைராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்றுமுன்தினம் (23.09.2023) வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் வீடு திரும்பாததையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு நாளை வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 09, 2026)...

world 39
செய்திகள்உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% அபராத வரி: உலக நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும்...

world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...

world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...