பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்
இலங்கைசெய்திகள்

பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்

Share

பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்

தொடம்கொட பிரதேசத்தில் வீடு புகுந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சம்பவம் காரணமாக போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட குழுவினர் கூரிய ஆயுதங்களுடன் தொலலந்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திமுத் சாமிக்க என்ற தொடங்கொட தொலலந்த பிரதேசத்தில் வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நபர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் மதுபான விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போதைப்பொருள் வியாபாரி மற்றும் குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பலைச் சேர்ந்தவர் எனவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருந்து விலகியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கிராமத்திற்கு தலைவலி என கொலைசெய்யப்பட்ட நபர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததன் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர், கொலைசெய்யப்பட்ட நபர் தொடம்கொட பொலிஸ் நிலையத்திற்கு வந்த வீடு திரும்பும் போது, ​​போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடித்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் விட்டு சென்றிருந்ததாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...