2 46
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

Share

இரத்தினபுரி இறக்குவானை – ஹோரமுல பொது மயானத்தில் முச்சக்கர வண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், முச்சக்கர வண்டியுடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதிய வேளையில் நடந்த கொடூர சம்பவத்தை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபரை முச்சக்கர வண்டியின் முன் இருக்கையில் அமர வைத்து, கம்பிகளால் கட்டி, பின்னர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தெரியவந்தது.

தீயில் சிக்கிய நபரின் உடல் முற்றிலுமாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்து இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...