2 46
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

Share

இரத்தினபுரி இறக்குவானை – ஹோரமுல பொது மயானத்தில் முச்சக்கர வண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், முச்சக்கர வண்டியுடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதிய வேளையில் நடந்த கொடூர சம்பவத்தை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபரை முச்சக்கர வண்டியின் முன் இருக்கையில் அமர வைத்து, கம்பிகளால் கட்டி, பின்னர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தெரியவந்தது.

தீயில் சிக்கிய நபரின் உடல் முற்றிலுமாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்து இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 6839e6fb171fc
இலங்கைசெய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட அரச வங்கி காசளர் கைது

இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு...

25 6839ea056de1c
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில்(Jaffna) பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை...

harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...