கனடா செல்ல ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி

10 7

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களிடமிருந்து 5.5 மில்லியன் ரூபாயைப் பெற்று வைத்திருந்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் பியகம பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக செயற்பட்டு பண மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் பெப்ரவரி மாதம் மாவனெல்ல பகுதியில் நபரிடம் 300000 ரூபாயையும், மற்றொரு நபரிடம் 250,000 ரூபாயையும் மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் அரநாயக்க பகுதியில் சிறிது காலம் வசித்து வந்தபோது அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 65 வயதுடையவர் எனவும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் அஜித் விஜேசிங்கேவின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version