இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

Share
24 1
Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாத்தறை, துடாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நேற்று காலை 7.48 மணிக்கு Fly டுபாய் விமானமான FZ-579 மூலம் டுபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளின் ஒரு தொகையையும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விஸ்கி போத்தல் ஒரு தொகையையும் அவர் தனது பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, ​​அவர் விஸ்கி போத்தல்களை தரையில் வீசி எறிந்ததாகவும், சுங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...