2 17
இலங்கைசெய்திகள்

15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!

Share

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு செய்தியாளர் சந்திப்பில் உருக்கமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது சம்பளம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அதனைப் பின்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கருத்துகள் குறித்த தனது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மமிதா.

சமீபத்தில் ஒரு இணையதளத்தில், “நடிகை மமிதா பைஜூ 15 கோடி சம்பளம் வாங்குகிறார்” என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இது விரைவில் சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த செய்தியின் கீழ் அதிக அளவிலான விமர்சனக் கருத்துகள் குவிந்ததாக நடிகை கூறியுள்ளார்.

அந்த செய்தி குறித்து மமிதா பைஜூ, “நான் 15 கோடி சம்பளம் வாங்குறேன்னு யாரோ எழுதிட்டாங்க… அதுக்கு கமெண்ட்ஸில ‘இவளுக்கு 15 கோடியா?’ன்னு திட்டுறாங்க… யாரோ செய்த தப்பிற்கு எனக்கு திட்டு விழுது.” என்று கூறியுள்ளார்.

அதாவது, ஒரு தவறான தகவலை யாரோ போட, அதற்காக தன்னை பேசும் நிலைக்கு மக்கள் சென்றுவிட்டனர் என அவர் கூறுகிறார். இது போன்ற தவறான செய்திகளை சரிபார்க்காமல் பகிர்வதும், விமர்சனம் செய்வதும் கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...