பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் : கருணா அம்மான் திட்டவட்டம்

24 668aae2e0fddd 11

பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் : கருணா அம்மான் திட்டவட்டம்

இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthy Muralitharan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (07) நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அதிபரின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், அதிபரின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை அதிபர் கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய அதிபர். அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesnghe) வாக்களிப்பார்கள்.

அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. அதிபரின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version