14 13
இலங்கைசெய்திகள்

சூடு பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Share

சூடு பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் பல முக்கிய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரதான கட்சி மட்டத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கட்சி மாறுதலுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அதிக அனுகூலங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

அண்மையாக கருத்துக்கணிப்புகளுக்கு அமைய வயதானவர்களின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஏனைய வயதினர் சஜித் மற்றும் அனுரவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகிறார்.

இதன் காரணமாக தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...