2 5
இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

Share

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மூன்று பிரதான வேட்பாளர்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புடன், ஜனாதிபதி ஒருவர், நிறைவேற்று ஜனாதிபதியாக மாற்றப்பட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு தனிநபரிடம் அதிக அதிகாரத்தை குவிக்கிறது

இதன் காரணமாக ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை துஸ்பிரயோகம் செய்யப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலேயே தனது முதன்மையான கவனம் செலுத்தப்படும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....