2 5
இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

Share

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மூன்று பிரதான வேட்பாளர்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புடன், ஜனாதிபதி ஒருவர், நிறைவேற்று ஜனாதிபதியாக மாற்றப்பட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு தனிநபரிடம் அதிக அதிகாரத்தை குவிக்கிறது

இதன் காரணமாக ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை துஸ்பிரயோகம் செய்யப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலேயே தனது முதன்மையான கவனம் செலுத்தப்படும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...