4 4
இலங்கைசெய்திகள்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள மைத்திரிக்கு அழைப்பு

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டு , கட்சியை ஒன்றுபடுத்த முன்வருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவ்வாறு கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதில் நாட்டம் இல்லாது போனாலும், குறைந்த பட்சம் கட்சியை ஒற்றுமைப்படுத்தும் செயற்பாட்டிற்கு தலைமைத்துவம் வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...