12
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்சவை பழிவாங்கும் அரசாங்கம்: திலித் ஜயவீர கடும் குற்றச்சாட்டு

Share

மகிந்த ராஜபக்சவை பழிவாங்கும் அரசாங்கம்: திலித் ஜயவீர கடும் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்த அரசாங்கம் பழிவாங்குவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை குறைத்தமையானது அவரது சிறப்புரிமைகளை குறைப்பதாக அமையாது எனவும் அது ஓர் பழிவாங்கல் செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…,

மகிந்த ராஜபக்சவை ஒரு நாளும் மறந்து விட முடியாது, அரசியல் கொள்கைகள் மாறுபட்டாலும் அவரை மறந்து விட முடியாது. போரில் வெற்றியீட்டிய தலைவரான மகிந்தவிற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலும் ஜே.வி.பி.யினர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். போரின் இறுதிக் கட்டத்தில் போரை நிறுத்துவதற்கு முயற்சித்தனர். அமெரிக்க டொலர்களுக்காக ஜே.வி.பி.யினர் இவ்வாறு செய்தனரே தவிர, தமிழ் மக்கள் மீதான கரிசனையில் அல்ல.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீறுவதனை விடவும் மகிந்த மீதான எதிர்ப்பை வெளியிடும் வகையில் இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...