16 22
இலங்கைசெய்திகள்

மகிந்த தொடர்பில் ரஞ்சன் வெளியிட்ட தகவல்

Share

மகிந்த தொடர்பில் ரஞ்சன் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ வசதிக்காக வழங்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் சேவையை இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டில் போரை நிறுத்துவதில் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதியின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் எடுப்பதில் உடன்படவில்லை.

 

இவ்வாறு மகிந்தவின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலையை புறக்கணிப்பது அரசியல் பழிவாங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டத்தை நடத்தினார். மூன்று ஆசனங்கள் என்று நாடாளுமன்றத்தில் கேலி செய்யப்பட்டனர். ஆனால் இன்று பெரும் போராட்டம் நடத்தி ஆட்சிக்கு வந்துள்ளனர்.

 

மக்கள் எதிர்பார்த்த வகையில் தற்போது திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்னுடையது தான். அது தான் ஊழலுக்கு எதிரான முழக்கம்.இருப்பினும், அரசியல் பழிவாங்கல் விடயத்தில் உடன்பாடு இல்லை. கபட அரசியல்வாதிகள் போல் அவர்களின் கால்களை இழுக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...