7 5
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் படைகளில் மோசடியாக பதவிகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யோஷித ராஜபக்சவுக்கு சட்டவிரோதமாக கடற்படையில் உயர் பதவிகள் வழங்கப்பட்டதைப் போலவே நெவில் வன்னியாராச்சிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பாதுகாப்புப் படைகளில் சிலருக்கு இந்த முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் புலனாய்வு பத்திரிகையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மகிந்த ராஜபகசவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தை விட அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை இருப்பது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்த நிலையிலேயே அவருக்கு மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...