17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

Share

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று(07.10.2025) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தின் படி முன்னாள் ஜனாதிபதிகள் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பாதுகாப்பு வரப்பிரதாசங்கள் இரத்துச் செய்யப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்படமாட்டாது.

எனினும், சில முன்னாள் ஜனாதிபதிகள் பாவித்த பாதுகாப்பு வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...