tamilni 245 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்

Share

ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியமான செய்தி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால், இது ஒரு சக்திவாய்ந்த செய்தியாக இருக்கலாம் என்று பலரால் நம்பப்படுகிறது.

அந்தச் செய்தி கிடைத்தவுடன் மகிந்த திடீரென காணாமல் போனதே அதற்குக் காரணமாகும். ரணிலின் இந்தச் செய்திக்குப் பின்னர் மகிந்த அதிகம் வெளியே வரவில்லை என்று பலர் கூறுகின்றனர்.

மகிந்தவைத் தவிர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இந்தச் செய்தி கிடைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் இந்தச் செய்தி கிடைத்ததும் மகிந்த சற்று மனவருத்தமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.

மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு ஜனாதிபதியின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...