4 26
இலங்கை

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

Share

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்தாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு(namal rajapaksa) ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அடுத்து ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர(Premalal Jayasekara) மீண்டும் மொட்டுவில் இணைய வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்: மாத்தறையின் மூத்த அரசியல் ஆளுமை மறைவு!

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர (Mahinda Wijesekera) தனது 83-ஆவது வயதில்...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சியால் நீர் தட்டுப்பாடு: விநியோகத்தைக் கட்டுப்படுத்த விசேட செயற்பாட்டுக் குழு நியமனம்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகள் வேகமாக வற்றி...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை நிராகரிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) வானூர்திகளைக் கொள்வனவு செய்தபோது சுமார் 2 மில்லியன் அமெரிக்க...

Untitled 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமையல் எரிவாயு விலை திருத்தம்: ஏப்ரல் 5 ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தகவல்!

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 5...