4 26
இலங்கை

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

Share

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்தாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு(namal rajapaksa) ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அடுத்து ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர(Premalal Jayasekara) மீண்டும் மொட்டுவில் இணைய வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...

Untitled 88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கமும் விவசாய அமைப்புகளும் மோதல்!

இலங்கையில் விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம்...

Untitled 87
செய்திகள்அரசியல்இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில்...