7 2
இலங்கைசெய்திகள்

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

Share

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம்.

எங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், “2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலர் சென்றனர். சில பேருடன் எஞ்சியிருந்தோம். அந்த குழுவுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியை உருவாக்கி மகிந்த ராஜபக்சதலைமையில் தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.

இம்முறையும் அதுதான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 19 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் இதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அறிவிப்பு விடுக்கப்பட்டபோதிலும் சில பொதுப் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபகரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரியவந்தது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...