9 54
இலங்கைசெய்திகள்

மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு: விஜேராம வீட்டில் குவியப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளுமாறு மகிந்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

அதனை உறுதிபடுத்தும் விதமாக அண்மையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உட்பட பலரும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும் ஒன்று சேருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்தியானது, பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....