tamilni 330 scaled
இலங்கைசெய்திகள்

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

Share

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம், சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் நம்பிக்கையுடன் உரையாடியமை சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சியின் முன்னிலையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய வேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அவரை விமர்சித்து வருவதாகவும் மகிந்தவிடம் தெரிவித்தார்.

யாரோ ஒருவரின் ஆலோசனையை பெற்று நாமல் இவ்வாறு செயற்படுவதாக மகிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தையும் பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...