tamilni 273 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கடும் கோபத்தில் மகிந்த

Share

கடும் கோபத்தில் மகிந்த

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அன்றைய நல்லாட்சிக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.

2015ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்தபோது, ​​நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. ஆனால் நல்லாட்சியின் பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் நாட்டைக் கைப்பற்றிய போது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2 சதவீதமாக குறைத்தது.

இதற்கு காரணம் ராஜபக்சர்களா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களிடம் கேள்வி எழுப்புவேன் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மிகவும் மதிப்பதாகத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தனது கட்சி விஞ்ஞாபனத்தில் வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தது.

தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி செயற்பட்டு வரிகளை குறைப்பது எவ்வாறு பிழையானது என கேள்வி எழுப்புவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை முடிவினால் தான் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றதாகவும் அவர்களின் வேலைத்திட்டத்தில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வற் உள்ளிட்ட வரி குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கல்விமான்கள் நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பேரில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நெடுஞ்சாலையில் ஊர்வலம் நடந்தமை வேடிக்கையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...