tamilnig 19 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்

Share

மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும்  மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் 9 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனவும், கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் தற்போது வரையில் அவரது மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஏழை மக்களின் வீடுகளில் மிகக் குறைந்த மின்கட்டணத்தை செலுத்தாத குற்றத்திற்காக அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தால் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் வீட்டில் மின்சாரத்தை துண்டித்துமாறு ரஞ்சன் ஜெயலால் சவால் விடுத்துள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் மின்சார சட்ட மூலத்திற்கு எதிராக மின்சார சபைக்கு முன்பாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மகிந்தவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது திருமணத்தின் போது ஏற்பட்ட மின்சார கட்டணத்தை செலுத்த தவறியிருந்தார்.

அதற்கான முழுத்தொகை பணமான 23 இலட்சத்தை தற்போதைய ராஜாங்க அமைச்சர் ஒருவர் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...