tamilni 441 scaled
இலங்கைசெய்திகள்

புற்று நோய் சிகிச்சை தொடர்பில் மோசடி விளம்பரம்

Share

புற்று நோய் சிகிச்சை தொடர்பில் மோசடி விளம்பரம்

புற்றுநோயை பூரணமாக குணப்படுத்துவதாக வெளியாகும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் உளவியல் மருத்துவர் கே.வி.என் ரஞ்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உறவினர்கள் பலர் மோசடிக்காரர்களிடம் சிக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை பூரணமாக குணப்படுத்த முடியும் என சிலர் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரம் செய்து மோசடி செய்வதாக அவர் எச்சரித்துள்ளார்.

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் சேவை வழங்கி வருவதாகவும், தாதியர் உள்ளிட்ட ஏனைய மருத்துவ சேவைகளை வழங்குவோரும் சிறந்த முறையில் அர்ப்பணிப்புடன் சேவையை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் இவ்வாறான மோசடிகளில் சிக்கி விடுவதாக அவர் கூறியுள்ளார்.

அநேகமான புற்று நோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து கொண்டால் பூரணமாக குணப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் புற்று நோய்களை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முடியும் என டொக்டர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடிகள் இடம்பெற்று வருவதாக அவர் எச்சரிக்னை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...