இலங்கைசெய்திகள்

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

5 2
Share

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று(02) ஆலோசனை வழங்கியதுடன், திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அவர்களை சங்கிலியால் பிணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களும் மனிதர்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படத் தகுதியானவர்கள் என்றும் அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.

நீதிமன்ற அறைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றை அவதானித்த பின்னர் மேலதிக நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சந்தேக நபர்களை விலங்குகள் போல் சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் மனிதர்கள், கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்று திறந்த நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் தெரிவித்தார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...