5 2
இலங்கைசெய்திகள்

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

Share

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று(02) ஆலோசனை வழங்கியதுடன், திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அவர்களை சங்கிலியால் பிணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களும் மனிதர்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படத் தகுதியானவர்கள் என்றும் அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.

நீதிமன்ற அறைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றை அவதானித்த பின்னர் மேலதிக நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சந்தேக நபர்களை விலங்குகள் போல் சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் மனிதர்கள், கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்று திறந்த நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...