MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Share

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தனுக ரோஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அவர் 2019 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

30-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி வழக்குத் தொடர்ந்ததால், பழிவாங்கும் விதமாக அதிகாரிகள் தனிமைச் சிறைக்கு மாற்றி கொடுமைப்படுத்துவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் இன்ஹேலர்களைக்கூட அதிகாரிகள் பறித்துச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மனுதாரருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறைத் துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த மனுவுக்கு நவம்பர் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...