5 31
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இடைநிறுத்தம்

Share

கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இன்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக அன்றே போராட்டங்களும் நடைபெற்றன.

குறிப்பாக கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சேவையை புறக்கணிக்க ஆரம்பித்தது. கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சாரதிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு 04 நாட்களுக்கு பின்னர் சொகுசு பேருந்து சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட சொகுசு பேருந்துகளுக்கு பதிலாக 10 பேருந்துகள் விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இயக்கப்படும் என விமான நிலைய தனியார் சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...